சிறுகனூர் அருகே உள்ள ஆய்குடியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோகிலா(21). டைப்ரைட்டிங் கிளாஸ் செல்வதாக கூறி திருச்சிக்கு சென்றார். மாலைவரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர்.
அவர் எங்கும் வரவில்லை என்று தெரிந்ததால் இதுகுறித்து கோகிலாவின் தாய் வள்ளி சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலா கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.