லங்கர் கட்டை சூதாட்டம்-11 பேர் கைது
திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடு அருகே உள்ள கொடம்பரை கிராமத்தில் லங்கர் கட்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை வளநாடு போலீசார் கைதசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.48 ஆயிரத்து 250 மற்றும் 10 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.