காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரம் கல்லணை ரோட்டில் தங்கையன் கோவில் அருகில் காவிரி ஆற்றில் முள் செடியில் சிக்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதை கண்ட அப்பகுதியினர் உடனே ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்