சமயபுரத்தில் சிறுமியுடன் உறவு வைத்த மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியில்
17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சமயபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பாரதி. வேன் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.இவரது தங்கையான 17 வயது சிறுமி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து்வருகிறார்.இந்நிலையில் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமி பாரதியின் வீட்டிற்கு வந்த போது சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் உறவு வைத்துள்ளார். இதனால் 17 வயது சிறுமி 4 மாத கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.