மாநகராட்சி விரிவாக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி ,முசிறி பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்வாக்கம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே. பிச்சை, செயற்பொறியாளர் சிவபாதம், உதவி இயக்குனர்கள் காளியப்பன் (பேரூராட்சிகள்), கங்காதாரிணி
(ஊராட்சிகள்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.