ஆபத்தான டிரான்ஸ்பார்மரை மாற்ற கோரி மனு
திருச்சி, ஜுன் 26 சி.பி.ஐ.(எம்.எல்) கட்சி சார்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூரில் பழுது அடைந்து மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்ற வலியுறுத்தி பூலாம்பட்டியில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் உதவிமின் பொறியாளரிடம் சி.பி.ஐ.(எம்.எல்) கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் சி.பி.ஐ.(எம்.எல்) மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார், நகர செயலாளர் பி.பாலு பங்கேற்றனர்.