லால்குடியில் விஷம் குடித்து தற்கொலை.சிகிச்சை பலனின்றி நேற்று பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் 38 வயதான தாஜுதீன்.இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் மது போதையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதைக்கண்ட அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.