சாலை பராமரிப்பு பணிகள்; போதை ஆசாமியால் போக்குவரத்து பாதிப்பு!
திருச்சியில் தீபாவளி பண்டிகையை நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் கருமண்டபம் காவிரி பாலம் மற்றும் குடமுருட்டி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் குடமுருட்டி பாலம் அருகே சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது அங்கு வந்த போதை ஆசாமி எதற்காக சாலை போடுகிறீர்கள் எனவும், சாலையின் நடுவில் நின்று லுங்கி அவுர நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்பு சம்பவ இடத்திற்கு சிலர் சென்று அவரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.