108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இங்கு மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையாளர்கள் கந்தசாமி, மாரியப்பன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணினர். இதில் ரூ.87 லட்சத்து 3 ஆயிரத்து 958 ரொக்கமும், 153 கிராம் தங்கமும், 1,870 கிராம் வெள்ளியும், 58 வெளிநாட்டு பணம் கிடைக்க பெற்றது.