பாலியல் தொல்லை – முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவி புகார்
திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவு, உயர் கல்வித்துறை செயலாளர்,உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தனக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அனுப்பிய விவகாரம் :
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாகா கமிட்டி அமைத்து முழுமையாக விசாரணை செய்து தற்போது விபரங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளது – விசாரணை கமிட்டி வழங்கி உள்ள விவரங்களை அடிப்படையாக வைத்து உயர்கல்வித்துறை இயக்குனர் இதில் நடவடிக்கை எடுப்பார் என பெரியார் ஈ.வே.ரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுகந்தி தகவல்.