ஸ்ரீருக்மணி தேவி – ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம்
முசிறி மகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ ருக்மணி தேவி ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம்.
முசிறி, ஆக, 9
திருச்சி மாவட்டம் முசிறியில்
மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . இந்த கோவிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுஆடி 23ம் நாள் காளியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ ருக்மணி தேவி ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது உலக அமைதிக்காகவும்,நோய் நொடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடையவும்,
விவசாயம் செழிப்படையவும்,
மழை வேண்டியும் பிரார்த்தனை நடைபெற்றது.