பரபரப்பான சாலையில் பாதாள சாக்கடையில் துர்நாற்றம் – கண்டுகொள்ளாத மாநகராட்சி!
திருச்சியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வளாகத்தில் சாலையில் உள்ள பரங்கி வேலுப்பிள்ளை பூங்காவிற்கு அருகே கடந்த இரண்டு மாதமாக பாதாள சாக்கடையில் இருந்து கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி இடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்விடத்தை கடக்கும் போது மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo