நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்
திருச்சி இனாம்குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து என்.சி.சி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பொது சுகாதாரம், நீர்நிலைகளை பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றிய நோட்டீஸ்கள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இனாம்குளத்தூர் அருகே உள்ள குளத்தினை
தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள், 2 (TN) ARMD SQN NCC அணியைச் சேர்ந்த ட்ரூப் கமாண்டர் திரு.ரமேஷ் குமார், தலைமை ஆசிரியர் திரு. ராஜா ஆகியோர் தலைமையில் அங்கு கிடந்த குப்பைகளை அகற்றி , சுத்தப்படுத்தியும், பொதுமக்களிடையேயே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.