கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம்
திருச்சி, ஆக. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் இன்று குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாநகர காவல்துணை ஆணையர் செல்வக்குமார், திட்ட இயக்குநர் தேவநாதன் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), ரமேஷ்குமார் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.