எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரின் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருச்சி மாவட்டம் முசிறியில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் சேர்மன் ஆக பதவி வகித்து வரும் முசிறி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎட் கல்லூரி, டிப்ளமோ இன் நர்சிங் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் நிலப்பரப்பளவு, கட்டிடமதிப்பு குறித்த அளவீடு குறித்த சோதனை. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.