திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது தம்பி சர்புதீன். இவர் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தனர். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் உறவினரான அருண்குமார் தங்கள் குடும்பத்தை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து லியாக்கத் அலி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் குமாரை கைது செய்தனர்.