முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
திருச்சி, பிப். 20 திருச்சிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குவிமான நிலையத்தில் சிறப்பான வர வேற்பு அளிக்க திமு கசார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலர் ந.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில்: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகை யில் பிப். 21 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு வழிகாட்டலின்பேரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. நிகழ்வில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் உள்ளாட்சிப் பிர திநிதிகள், அனைத்துப்பிரிவு நிர் வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்கள்.