திருச்சி, ஆக.8: தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், காணாமல் போன தனது உறவினரின் மகளை ரகசியமாக கண் டறிய தனியார் துப்பறியும் நிறுவனத்தை இணையதளத்தில் தேடியுள்ளார். அப் போது, திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரின் விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
அப்போது, அந்த நிறுவனத்தை நடத் துபவர்கள் கூறியபடி திருச்சி எடமலைப் பட்டி புதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று காணாமல் போன பெண்ணின் விவரங்களை கிறிஸ்டோபர் தெரிவித்துள் ளார். அவர்களும் கண்டுபிடித்து தருவதாகக் கூறி ரூ. 21,000 கட்டணம் பெற்றுள்ளனர். ஆனால், கூறியபடி அந்தப் பெண்ணை கண் டுபிடித்து தராமல், அப்பெண் குறித்து தவ றான தகவல்களையும் அந்த நிறுவனத்தினர் கூறியுள்ள னர்.
இதனால் சந்தேகமடைந்த கிறிஸ்டோ பர் திருச்சி சைபர்கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்கு மார் வழிகாட்டுதலின் பேரில், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தேவராணி, கூடு தல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ண நாதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தலை மையில் உதவி ஆய்வாளர்கள் சதீஷ் குமார் (தொழில்நுட்பப் பிரிவு) உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார் விசாரணை மேற் கொண்டனர்.
திருச்சி, ஆக.8: தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபர் கிரைம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், காணாமல் போன தனது உறவினரின் மகளை ரகசியமாக கண் டறிய தனியார் துப்பறியும் நிறுவனத்தை இணையதளத்தில் தேடியுள்ளார். அப் போது, திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரின் விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
அப்போது, அந்த நிறுவனத்தை நடத் துபவர்கள் கூறியபடி திருச்சி எடமலைப் பட்டி புதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று காணாமல் போன பெண்ணின் விவரங்களை கிறிஸ்டோபர் தெரிவித்துள் ளார். அவர்களும் கண்டுபிடித்து தருவதாகக் கூறி ரூ. 21,000 கட்டணம் பெற்றுள்ளனர். ஆனால், கூறியபடி அந்தப் பெண்ணை கண் டுபிடித்து தராமல், அப்பெண் குறித்து தவ றான தகவல்களையும் அந்த நிறுவனத்தினர் கூறியுள்ள னர்.
இதனால் சந்தேகமடைந்த கிறிஸ்டோ பர் திருச்சி சைபர்கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்கு மார் வழிகாட்டுதலின் பேரில், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தேவராணி, கூடு தல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ண நாதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தலை மையில் உதவி ஆய்வாளர்கள் சதீஷ் குமார் (தொழில்நுட்பப் பிரிவு) உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார் விசாரணை மேற் கொண்டனர்.
விசாரணையில், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள துப்பறியும் நிறுவனம் போலி யானது என்று தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் (31), வசந்த் (24) ஆகிய இருவ ரையும் திங்கள்கிழமை கைது செய்து விசா ரித்தனர். விசாரணையில், தமிழகம் முழுவ தும் பல்வேறு நகரங்களில் இவர்கள் போலி யாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்ததும், போலி திருமண உதவி மையம் நடத்தி வந்த தும் தெரியவந்தது.
இந்த நிறுவனங்கள் மூலம் தங்களை தொடர்புகொண்டுவருபவர்களிடம்லட்சக் கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டு தவ றான தகவல்களை தெரிவிப்பது, தனிநபர் களை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கலாம் எனவும், இதுபோன்ற போலியான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல் ஆய் வாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.