திருச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் சித்த மருத்துவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் ஏழை, எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர், மருந்துகள், புடவை, உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவைகள் சுமார் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் டாக்டர் தமிழரசி, மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.