திருச்சியில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் விழா செப்டம்பர் இன்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில பொருளாளர் கே.பி பழனிவேல் பிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.கதிரேசன் பிள்ளை, எஸ்.பி முத்து ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்