செல்போனை திருடிய வாலிபர் கைது..
திருச்சி மாஜி ராணுவ காலனி 6வது தெருவை சேர்ந்தவர் சிவகாமி வயது (30) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஜன்னலோரத்தில் தனது விலை உயர்ந்த செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு சென்றுவிட்டார். திரும்ப வந்து பார்த்த பொழுது செல்போன் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாமி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விலை உயர்ந்த செல்போனை திருடிய அரியமங்கலம் காமராஜ் நகர் பிரசாந்த் (எ) பாண்டு பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.