திருச்சி தி.மு.க.வில் உட்கட்சி பூசுல் : முதலமைச்சர் தலையிட கட்சியினர் கோரிக்கை

0 772
Stalin trichy visit

சட்டமன்ற தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் எப்பொழுதும் கே.என்.நேருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நேரு மேற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தை சேர்ந்த இனிகோ இருதயராஜ் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஏற்கெனவே திருவெறும்பூரில் இருந்து வெற்றி பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி இம்முறை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் திமுக சார்பில் கிழக்கு தொகுதி இனிக்கே இருதயராஜுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்போது முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கே.என்.நேருக்கும் இடையே உரசல் ஏற்பட ஆரம்பித்ததாக திருச்சி திமுக உடன்பிறப்புகள் அரசல் புரசலாக கூறி வருகின்றனர். இந்த உரசல் இரண்டு அமைச்சர்களின் தொண்டர்கள் மத்தியிலும் அவ்வபோது எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில்தான் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அன்பில் மகேஷுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் வெற்றியும் பெற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகாவும் பதவி வகிக்கிறார்.
கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெற்றி பெற்ற பின்பு அவர்களின் கட்சியினர் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக் கூறி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.
இதில் அமைச்சர் கே என் நேரு தரப்பை சார்ந்த ஆதரவாளர்கள் வைக்கும் பேனரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தவிர்த்தும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினர் வைக்கப்படும் பேனரில் கே.என்.நேருவின் புகைப்படங்கள் தவிர்த்து பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
நேருக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே ஏற்கெனவே அரசல் புரசலாக இருந்த அதிகார பிரச்சனை, தற்போது பிளக்ஸ் பேனர்கள் மூலமாக பகிரங்கமாக வெடித்து வருவது திருச்சி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.