திருவெள்ளறை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளரை புண்டரீகாட்சப்பெருமாள் கோயிலின் தெற்கு வாசல் கோபுரம் படிகட்டின் கிழக்குபுறம்
அருகில் உள்ள காலி இடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பந்தல் என்ற போர்வையில் கட்டப்பட்ட கான்கீரிட் செட்டை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்திர விட்டதை தொடர்ந்து நாளை 08.07.2021 காலை 6.30 மணிக்கு மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர்/செயல் அலுவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.