டிராக்டரில் மணல் அள்ளிய 2 பேர் கைது
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகில் கம்பிளியம்பட்டியிலுள்ள ஆற்றுவாரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த புத்தாநத்தம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்குச் சென்ற போலீசார் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி(வயது 54), கம்பிளியம்பட்டி சேர்ந்த துரைராஜ்(வயது 45) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.