34 வது வார்டு அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார்
திருச்சி மாநகராட்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் சீனிவாசன் பாரதி நகர், அன்பில் நகர் மற்றும் சுண்ணாம்புக் காரத் தெரு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.சென்ற இடம் எல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், மக்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்து அவற்றை வெற்றி பெற்ற உடன் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தெண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

