சிறப்பு மருத்துவமுகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜுன் 24 முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றம் காப்பீட்டு திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.