பழனிவேல் தியாகராஜன் குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு
தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் குறித்து அவதூறு பரப்பிய சௌதா மணி மற்றும் மாரிதாஸ் மீது திமுக திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் A.K.அருண் தலைமையில் ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாலா, திருச்சி மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, திருச்சி மேற்கு தொகுதி சமூக வலைதள அமைப்பாளர் ஆசிக், லால்குடி தொகுதி சமூக வலைதள அமைப்பாளர் தமிழ் கொடியாலம் ஊராட்சி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.