வைகுண்ட ஏகாதசி 3ம் நாள் திருநாள்
திருச்சி, டிச.22 நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 3 ஆம் நாளில் – நாச்சியார் திருமொழிக்காக அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி, அதில் சந்திர – சூர்ய வில்லை, சந்திர ஹாரம், கலிங்கத்துராய், சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி திருமார்பில் – கண்டபேரண்ட பக்க்ஷி பதக்கம், அதன் மேல் அழகிய மணவாளன் பதக்கம் – ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம்; வைரக்கல் ரங்கூன் அட்டிகை, நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை,8 வட முத்து மாலை,தங்க காசு மாலை,மகரி, வரிசையாக வெள்ளை – சிகப்பு என்று அடுக்கு பதக்கங்கள், சிகப்புக் கல் அபய ஹஸ்தம்,ரதனங்கி கடி அஸ்தம் (இடது திருக்கை), சிகப்பு கல் இழைத்த திருவடி, அதில் சதங்கை சாற்றி, தாமரை நிறம் பட்டுடுத்தி பின் சேவையாக பூஜ கீர்த்தி மற்றும் மகாலட்சுமி பதக்கம் அணிந்து சேவை சாதிக்கிறார்.