திருச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிக் பள்ளி (CBSE) வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து, பள்ளியின் வெள்ளி விழாவினை முன்னிட்டு மாணவ செல்வங்கள் நடத்திய கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம், அம்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் செல்வகணபதி, தாளாளர் அழகர்சாமி கண்ணன், மாணவ மாணவிகளும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டார்கள்.