திருச்சி போதை தடுப்பு பிரிவுக்கு முதல் முறையாக மோப்ப நாய்குட்டி “பான்ட்”
வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெறும் 6 மாத பயிற்சிக்கு இன்று பாண்ட் அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு கஞ்சா, அமீன், ஹொக்கைன் போன்ற போதை பொருட்களை பாண்ட் கண்டுபிடிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். இன்று மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் போதை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாசன் நாய்க்குட்டியை (பாண்ட்) காண்பித்து சென்றார்.