நியாயவிலை கடை மற்றும் 7 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த அமைச்சர்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பூலாங்குடியில் பகுதிநேர நியாய விலைக் கடையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருவெறும்பூர் ஒன்றியம், பழங்கனாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் ரூபாய் 7இலட்சம் மதிப்பில் புதியதாகக் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (24 .11 .2021 ) திறந்து வைத்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என.சேகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் கே .எஸ் .எம். கருணாநிதி, ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் பலர் உள்ளனர்