தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது பொய் வழக்குப்போட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்திருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி அண்ணா சிலை முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, ப.குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வருகின்றனர்.