காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை எதிர்த்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திருச்சி, செப். 20 மலைக்கோட்டை காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 14 வது வார்டுபகுதியில் மாநகர மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி , மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி முன்னிலையில் வார்டு தலைவர் முகமது ரபிக் ஏற்பாட்டில் வாக்கு திருட்டை எதிர்த்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மலைக்கோட்டை கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று தொடங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொதுசெயலாளர் உறந்தை செல்வம், கோட்ட பொருளாளர் மோகன் , கோட்ட பொதுசெயலாளர் முகமது ஆரிஃப்,பரத், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இலக்கிய பிரிவு பத்தபநாபன், விஜயலட்சுமி, பரமசிவம், சரவணன், மகேஸ்வரி மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.