வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
திருச்சி, ஏப். 6 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சத்திரம் பேருந்து நிலையத்தில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானாவில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானாவில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாபெரும் பேனர் வைக்கப்பட்டது.