வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, பிப்.7 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மேக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடியாக்குறிச்சி கிராமத்தில் கழிவுநீர் வடிகால் இல்லாத அமைக்கப்பட்டுள்ள சிமெண் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.