அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலத்திலுள்ள ஓயஸிஸ் பொறியியல் கல்லூரியில் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துரையாடி, சிறப்பு கவனத்துடன் வழங்கப்படும் கல்வி மற்றும் இதர வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.