கிராப்பட்டி அன்பு நகரில் குடிநீர் விநியோகம்-குளோரின் அளவுகுறித்தும்: மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண். 4. கிராப்பட்டி அன்பு நகரில் மாநகராட்சி ஆணையர் மரு. ஆர். வைத்திநாதன் இன்று காலை 6 மணி அளவில் குடிநீர் வினியோகம் குறித்தும். குடிநீரில் குளோரின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
4 . வார்டு எண் 50, 51 மற்றும் 53 வார்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்கள் வருகை பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் துப்புரவு மேற்பார்வையாளர்களிடம் தெரிவித்ததாவது துய்மைப்பணியாளர்கள் சரியான நேரத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் தூய்மை பணியை சரிவர செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
