திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் கொடியேற்றம்!
திருச்சியின் முக்கிய பேராலயமாக உள்ளது மேலப்புதூரில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயம் ஆகும். இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தி ஆரோக்கியமாதா உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த அளவிலானவர்களே கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவணி வருகிற 8-ந்தேதி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்படவுள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய…https://www.instagram.com/invites/contact/?i=4swapgvqromw&utm_content=lzhzhot