இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்…
பள்ளி கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வையம்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரவாடி ஊராட்சி தொப்பநாயக்கன்பட்டியில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார். இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட
அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் VA.ராஜேந்திரன், செயலாளர் சீரங்கன் ஒன்றிய குழு தலைவர் குணசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார், துணை அமைப்பாளர்கள் குண்டூர் பாலமுருகன், சக்தி பிரகாஷ், ரவிச்சந்திரன், விஷ்ணுவரதன் மற்றும் வையம்பட்டி ஒன்றிய அமைப்பாளர் பெர்னாட் சாமிநாதன் துணை அமைப்பாளர்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், அருண் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.