பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவபடத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, மே 23 பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்த நாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
