திருச்சி கே .கே .நகர், எஸ். எம் .இ. எஸ். சி காலனி அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் இவரது மனைவி பொன்னுமணி ( வயது32) திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் .
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற பொன்னுமணி வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் இல்லை உடனே இது குறித்து அவரது கணவர் கணேசன் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான பொண்ணு மணியைத் தேடி வருகிறார்.