தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு : 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு : சந்தேக வட்டத்தில் 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை.
ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகீல் அக்தர் முன்பு நாளை ஆஜராக உள்ளனர் – அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது – ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன்,நந்தகுமார் ஆகியோருக்கு சிபிஐ உதவியுடன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகே இந்த வழக்கில் வேறு எந்த திருப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.