காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்களிடம் வழக்கு தொடர்பான பதிவுகளை கேட்டிருந்தும், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வரப்பெறும் வழக்குகளை வழக்கிற்கு தகுந்த நடவடிக்கை முறையாக எடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் உடன் இருந்தனர்.