வாயு மூலக்கூறு பிரிப்பான் கருவி குறித்த பயிற்சி
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மண்ணின் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதற்கான சிறப்பு மையத்தில் “வாயு மூலக் கூறு பிரிப்பான் கருவிநுட் பங்கள் குறித்த பயிற்சி நடந்தது. இந்தப் பயிற்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
முதன்மையர் முனைவர். மாசிலாமணி, சிறப்புரைஆற்றி, மேம்பட்ட ஆராய்ச் சிக்கான மையத்தில் உள்ள கருவிகள் மற்றும் வசதிகளை எடுத்துரைத்தார். இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உயர்- தொழில்நுட்ப வேளாண் ஆராய்ச்சியில் இந்தக் கருவியின் பயன்பாட்டையும் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனை வர் பாலசுப்ரமணியன் விளக்கி கூறினார்.