திருச்சி விமான நிலையத்தில் ரூ.61 இலட்சம் மதிப்புள்ள கடத்தல்தங்கம் பறிமுதல் : காரைக்குடியை சேர்ந்த ஒருவர் கைது
திருச்சி விமான நிலையத்தில்ரூ .61 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்இதுதொடர்பாக காரைக்குடியை சேர்ந்த நபர் கைது.துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டபோது காரைக்குடியைச் சேர்ந்த ஆயூப்கான் என்பவர்தான் கையோடு கொண்டு வந்த எமர்ஜென்சி லைட்டில் ரூ.60.72 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.