17,632 சதுரஅடி பரப்பளவில் மியாவாக்கி அடர்வனக் காடு உருவாக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்காவில் 17,632 சதுரஅடி பரப்பளவில் மியாவாக்கி அடர்வனக் காடு உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியினை

மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர்ரகுமான், கோட்டத்தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சிப் பகுதியில் கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்கா மற்றும் வின்ஸ் அன்பு அவென்யூ பூங்கா, கணபதி நகர் பூங்கா, சுப்பிரமணிய நகர் பூங்கா, பாத்திமா நகர் அம்மன்நகர் பூங்கா, மற்றொரு கணபதி நகர் பூங்கா, நட்சத்திர நகர் பேஸ்2 பூங்கா ஆகிய 7 இடங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அடர்வனம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அடர்வனத்தில், புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, நீர்மருது, பாதாம், இச்சி உள்ளிட்ட 24 வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன.