திருச்சி மாவட்ட பதிவாளர்கள் உள்பட 26 பேர் பணியிடமாற்றம்!

0 542
Stalin trichy visit

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றி வந்த மாவட்ட பதிவாளர்கள் மற்றும் அதனையொத்த பணிகளில் பணிபுரிந்து வந்த 26 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட பதிவாளர்(தணிக்கை) முரளி திருச்சி எண்-3 இணை சார்பதிவாளராகவும், திருச்சி எண்-3 இணை சார் பதிவாளராக இருந்த அஞ்சனகுமார் விருதுநகர் மாவட்ட பதிவாளராகவும்(தணிக்கை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சங்கர் கோவை எண்-2 இணை சார்பதிவாளராகவும், கோவை எண்-2 இணை சார் பதிவாளர் கார்த்திகேயன் திருச்சி மாவட்ட பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.