திருச்சி உள்பட தமிழகத்தில் பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையிலான 30 போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சின்னச்சாமி சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.