முக்கொம்பு மேலணைக்கு 32,476 கன அடி நீர் வரத்து, கொள்ளிடம் ஆற்றில் 22,650 கனஅடி நீர் வெளியேற்றம்!
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,476 கனஅடி நீர் வருகின்றன.
கொள்ளிடம் ஆற்றில் 22,650 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் 6,681 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு கொள்ளிடத்தில் 3,145 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பாசன வாய்க்கால்களான அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவனை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.