மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருச்சி, ஜன.12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 63 ஆவது குடியரசு தின விழாவையொட்டி தர்மபுரியில் கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதியில் தங்கி காஜாமியான் பள்ளியில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பெற்றதையொட்டி பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன், விடுதி மேலாளர் சுகந்தி, பயிற்றுநர் குணசேகரன் மற்றும் பள்ளி நிர்வாகிககள், தலைமையாசிரியர்கள் உள்ளனர்.